
சட்டம் - கூர் மழுங்கும் ஆயுதம். நீண்ட,நெடிய சமூக மற்றும் அரசியல் வரலாற்றினையுடைய இந்தியாவில் "சட்டம்" மற்றும் "நீதி" குறித்து புராண, இதிகாச நூல்கள் மூலமும், பல்வேறு புனைவுக்கதைகளின் வாயிலாகவும் பலதரப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்ததையும், தவறான நீதி வழங்கியதற்காக தனது ஆட்சியையும், உயிரையும் துறந்த மன்னனின் கதைகளையும், தாய்ப்பசுவின் கண்ணீரை துடைக்க தவறு செய்த தன் மகனையே தேரில் இடறி தண்டித்த அரசனின் "நீதி பரிபாலன"த்தையும் படித்துள்ளோம். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பின்பற்றப்பட்ட நவீன சட்டமுறைகளும் ஆங்கிலேயர்களின் லாபத்திற்காகவும், இந்தியர்களை அடிமை படுத்துவதற்க்காகவுமே பயன்படுத்த பட்டது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மக்களாட்சி முறையில் தேர்ந்துடுக்கபட்ட எந்தவொரு அரசும் அரசியலமைப்பு...