
முஸ்லீம்களது சொத்து வாரிசுரிமைச் சட்டங்கள் சிக்கலானவை. ஷியாக்களுக்கும், சன்னிக்களுக்கும் வாரிசுரிமைகள் வேறுபடுகிறன. ஆனால் கீழ்கண்ட மூன்று பொதுவான விதிகள் அனைவருக்கும் பொருந்தும்:-
1. இறுதிச் சடங்குகளுக்குச் செலவினங்கள், கடன்கள் ஆகியவற்றை அடைத்த பின்னர், மீதியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்குத்தான், உயில் எழுதி வைக்கமுடியும்.
2. ஒரு ஆனுக்கு, பெண்ணைவிட இரண்டு மடங்கு சொத்துரிமை உண்டு.
3. ஒரு பரம்ரையில் வந்த வாரிசுதாரர்கள் என்கிறபோது, நெருக்கமான மகளை எடுத்துக் கொண்டு, பேரனை விட்டுவிடலாம். மகன் பேரனைவிட நெருக்கமானவர் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த வாரிசுரிமைச் சட்டம் இந்திய கிறித்துவர்களிடையே சொத்துரிமை பகிர்விற்கு வழிவகை செய்கிறது. சிறப்புத் திருமணச் சட்டபடித் திருமணம் செய்து கொண்டவர்கள், இந்தியப் பிரஜா உரிமை பெற்ற ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், யூதர்கள் ஆகியோருக்கும் வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும்.
கணவனை இழந்த பெண்ணுக்கு, அவரது கணவன் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு கிடைக்கிறது. மீதமுள்ள சொத்துகள், இறந்தவருடைய வாரிசுதாரர்களுக்குச் சேருகிறது. வாரிசுகள் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சொத்தைத்தான் பிரித்துக் கொள்ள வேண்டும். விதவை மனைவி மட்டுமே இருந்தால், அவருக்கு கணவனது சொத்தில் பாதி சேரும். மீதி, கணவனது தந்தைக்கும் சகோதரிகளுக்கும் சேரவேண்டும். ஒரு பெண்ணின் சொத்தும், இதே அடிப்படையில்தான் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
பார்சி இனமக்களிடையில் ஒர் ஆணின் சொத்து, விதவை மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண் குழந்தைக்கும், விதவைக்கும் ஒரு பெண் குழந்தைக்குரிய பங்கில், இரண்டு மடங்கு பிரித்துத் தரப்படுகிறது. தந்தைக்கு பேரனின் பாதிப்பங்கும், தாய்க்கு பேத்தியின் பாதிபங்கும் வழங்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் சொத்து, கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
நிதி அல்லது இன்சூரன்ஸ் பாலிசியில் (நியமனதாரர்) நியமிக்கப்படும் பிரதிநிதி என்று குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கே சொத்துரிமை மாற்றப்படுவதில்லை. பிரதிநிதி (நியமனதாரர்) என்று குறிப்பிடுவது, அந்தப் பிரதிநிதி அறங்காவலர் சொத்துக்குப் பொறுப்பானவர் என்ற அடிப்படையில்தான் நியமனதாரர் பெயர் சில பத்திரங்களில் நாமினி பெயர் என்று குறிப்பிடப்படுகிறது.
கணவனது சொத்துக்கள் பிரிக்கப்படும்போது, மனைவியின் சொந்தச் சொத்துக்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. பெண்ணிற்கே அவலது சொந்தச் சொத்தில் முழு உரிமை உண்டு. பெண்ணின் சொத்துக்கள் என்று சொல்லும் போது, அவள் சம்பாதித்தது, தனிப்பட்ட சொத்துக்கள், அவள் பெற்ற வெகுமதிகள் (திருமணத்தின் போது) அதில் அடங்கும்.
உயில்
ஒருவர் இறப்பதற்கு முன்னர், உயில் எழுதப்படுகிறது. சொத்துக்கள் பிரிவினை தொடர்பாக அந்த நபர் இறந்ததும், தாவாக்க்கள் வழக்குகள் சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயில் எழுதி வைக்கப்படுகிறது. உயில் எழுதுபவர் அவர் விருப்பப்படி, அவரது சொத்துக்களை, அறக்கட்டளைகள் உட்பட எந்தக்காரியத்திற்கும் எழுதிவைக்கலாம்.
இந்துக்கள், முஸ்லிம்களைத் தவிர, ஏனையோர் திருமணத்திற்குப் பின்னர், மற்றொரு புதிய உயில் எழுதவேண்டும். திருமணத்திற்குப்பின்பு புதிய உயில் எதுவும் எழுதப்படவில்லை என்றால், அந்த நபர் இறந்த பின்னர் வாரிசுரிமைச் சட்டபடி சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.
ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் - அவர்கள் கணவன்/ மனைவி அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது.
(நன்றி: வழக்கறிஞர் முனைவர் சோ.சேசாலம் எழுதிய ‘பெண்ணுரிமைச் சட்டங்கள்’,)
1 comments:
good
Post a Comment